idarinum thalarinum enathuru noi

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு...?
ஈவது ஒன்று எமக்கிலையேல்
அதுவோ உனது இன்னருள்?
ஆவடுதுறை அரனே!